கிருஷ்ணகிரி
நிகரிலி சோழமண்டலமாய் இருந்த கிருஷ்ணகிரி
விதுகதழகி நல்லூராய் இருந்ததும் கிருஷ்ணகிரி
நுளம்பர்களின் நுளம்பாடியாய் இருந்த கிருஷ்ணகிரி
காலப்போக்கில் எயில்நாடாவாக இருந்ததும் கிருஷ்ணகிரி
சிந்து நாகரிக ஓவியம் இருந்த கிருஷ்ணகிரி
பாறையால் ஆன ஓவியம் இருந்ததும் கிருஷ்ணகிரி
நவகண்டம் கற்களின் சரித்திரம் இருந்தது கிருஷ்ணகிரி
பாறைக் கற்களின் சித்திரம் இருந்ததும் கிருஷ்ணகிரி
பன்னிரெண்டு கோட்டைகள் இருந்த கிருஷ்ணகிரி
பாரா மகாலென பெயர் இருந்ததும் கிருஷ்ணகிரி
இந்தியாவுக்கு இராஜாஜியைத் தந்தது கிருஷ்ணகிரி
திருவள்ளுவருக்கு திருவுருவம் தந்ததும் கிருஷ்ணகிரி!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment