Tuesday, 28 September 2021

கிருஷ்ணகிரி

 

கிருஷ்ணகிரி

நிகரிலி சோழமண்டலமாய் இருந்த கிருஷ்ணகிரி

விதுகதழகி நல்லூராய் இருந்ததும் கிருஷ்ணகிரி

நுளம்பர்களின் நுளம்பாடியாய் இருந்த கிருஷ்ணகிரி

காலப்போக்கில் எயில்நாடாவாக இருந்ததும் கிருஷ்ணகிரி

சிந்து நாகரிக ஓவியம் இருந்த கிருஷ்ணகிரி

பாறையால் ஆன ஓவியம் இருந்ததும் கிருஷ்ணகிரி

நவகண்டம் கற்களின் சரித்திரம் இருந்தது கிருஷ்ணகிரி

பாறைக் கற்களின் சித்திரம் இருந்ததும் கிருஷ்ணகிரி

பன்னிரெண்டு கோட்டைகள் இருந்த கிருஷ்ணகிரி

பாரா மகாலென பெயர் இருந்ததும் கிருஷ்ணகிரி

இந்தியாவுக்கு இராஜாஜியைத் தந்தது கிருஷ்ணகிரி

திருவள்ளுவருக்கு திருவுருவம் தந்ததும் கிருஷ்ணகிரி!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment