பாடம் படிப்போம்
நானும் சம்பாதிக்கிறேன் என்ற கர்வத்திற்கா படிப்பு?
நானும் படித்துள்ளேன் என்ற கவுரவத்திற்குதான் படிப்பு!
வேலைக்கு செல்ல வேண்டும் என்பதற்கா படிப்பு?
எல்லா வேலையையும் சரியாக செய்யவே படிப்பு!
ஆண் ஆதிக்கம் போய் பெண் ஆதிக்கம் வரவா படிப்பு?
ஆதிக்கம் அற்ற மனிதாபிமானம் வளரவே படிப்பு!
சமுதாயத்தில் போட்டி பொறாமைக்கா படிப்பு?
ஒன்றே குலமாக இணைந்து வாழவே படிப்பு!
ஆண் பெண் சேர்ந்து புகைப் பிடிக்கவா படிப்பு?
நல்லதைக் கற்று மானம் காக்கவே படிப்பு!
விறகை எரித்து சமைத்துப் படித்தால் வராதா படிப்பு?
ஆர்வம் இருந்தால் படிக்க வரும் எல்லோருக்கும் படிப்பு!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment