இதயம் இருந்தால் இன்பம்
இதயத்திலிருந்து ஊற்றெடுக்கும் அன்பு இயற்கையான தூய அன்பு
இதயத்தில் உதயமான உறவு உயிர் உள்ளவரை தொடரும் உறவு
மூளைச்சாவால் உடலும் அழியாது உடலை விட்டு உயிரும் பிரியாது
இதயம் நின்று விட்டால் உயிரும் இருக்காது உடலும் இருக்காது
மூளையை மட்டும் பயன்படுத்துவோரை மண்ணுலகம் வாழ்த்திப் போற்றும்
இதயத்தின் உணர்வோடு வாழ்வோரை விண்ணுலகம் வணங்கிப் போற்றும்
மூளையால் குறுக்குப் புத்தியோடு கிறுக்குப் புத்தியும் வருவதுண்டு
இதயத்தால் குடும்பப் பிணைப்போடு சமுதாயப் பிணைப்பும் வருவதுண்டு!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment