செயற்கையை வெல்லட்டும் இயற்கை
குறிஞ்சியில் ரயில் செயற்கை; காட்டில் மாளிகை செயற்கை
மருதத்தில் மனை செயற்கை; நெய்தலில் விடுதி செயற்கை
பாலையில் பசுமை செயற்கை; கவிதையில் பொய்மை செயற்கை
போதைக்கு நீர் இருப்பது செயற்கை; குடிநீரை அழித்தது செயற்கை
விஞ்ஞான விபரீதம் செயற்கை; மெஞ்ஞான வீழ்ச்சி செயற்கை
அரசியலில் தலைவராவது செயற்கை; விவசாயத்தில் விபரீதம் செயற்கை
இயற்கையை மாற்றுவது செயற்கை; இயற்கையின் பிடியில் செயற்கை!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment