கருணைமிக்க கணபதியார்
மிருக முகம் கொண்டு மனித உடல் கொண்ட அருளாளர் பிள்ளையார்
மனித உடல் கொண்டு மிருகக் குணம் கொண்டோரை விரும்பார் கணேசர்
மிருகக் குணம் கொண்டு மனிதனென நடிப்போரை விரும்பார் கணநாதர்
அழுக்கை நீக்கினாலும் அழுக்காகிப் போனோரை விரும்பார் வரதனார்
மிருக-மனித நிலை கடந்து தெய்வக் குணத்தை அடைய அருள்வார் விநாயகர்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment