*(11 September 2021, பாரதியார் நூற்றாண்டு நினைவு நாள்)*
பாரதி யார்?
பெண்ணின் இயற்கையான பேரழகின் கிளியாக என்றென்றும் ரதி பண்ணின் இயற்கையான சீரழகின் கவியாக என்றென்றும் பாரதி
தேரை நிறுத்தி கடகடவென கீதையாக உபதேசம் செய்தார் சாரதி ஊரை நிறுத்தி கிடுகிடுவென கவிதை உபதேசம் செய்தார் பாரதி
பணத்தைக் காக்க தன்மானத்தை இழந்தோரும் உண்டு இழப்போரும் உண்டு இனத்தைக் காக்க தன்மான பாரதிபோல் வாழ்ந்தோரும் உண்டு வாழ்வோரும் உண்டு
கூழைக் கும்பிடுப் போட்டு அசிங்கமாய் இருந்தோரும் உண்டு இருப்போரும் உண்டு தலை நிமிர்ந்து பாரதிபோல் சிங்கமாய் இருந்தோரும் உண்டு இருப்போரும் உண்டு
அதுவெல்லாம் சரிதான், பாரதியை யார் என்றா கேட்கின்றீர்?
முண்டாசுக் கட்டி தமிழனின் வீரம் காத்தது யார்?
முறுக்கு மீசையில் தமிழனுக்கு வீரம் சேர்த்தது யார்?
வேட்டியோடு coat போட்டு அந்நியனை மிரட்டியது யார்?
தமிழ்ப் பாடலில் புரட்சி செய்து பகுத்தறிவைப் புகுத்தியது யார்?
புதுக் கவிதைக்கு உயிர்க் கொடுத்து நமக்கெல்லாம் கவிஞர் என பெயர்க் கொடுத்தது யார்?
அவர்தான்...
பாரதியார்! பாரதியார்!! பாரதியார்!!!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment