தெளிந்தால் தெளிவு
தெளிந்த நீரில் வானம் பார்; நீரில் நீந்தும் மேகம் பார்
தெளிந்தால் தெரியுது பார்; தெளியாமல் தெரியுமா பார்
நீரில் தெரியும் பிம்பம் பார்; குளிரில் குளிரா பிம்பம் பார்
ஏரிக்கரையில் அழகைப் பார்; அடிபட்டு மகிழும் புல்லைப் பார்
வரப்பின் வரம்பில் வயலைப் பார்; வரம்பை மீறா நீரைப் பார்
வளைவு நெளிவில் நடந்துப் பார்; வழியில் தடையைக் கடந்துப் பார்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment