தெய்வத்திடம் கோரிக்கை
ஊரைக் கெடுத்து உலையில் போடும் இரக்கமற்றோரை இறக்கி வைக்கணும்
அரசன் அன்றன்றே செயல்பட்டது போல் தெய்வமும் இன்றே செயல்படணும்
நன்றி மறக்கும் நயவஞ்சகப் பேர்வழிகள் உடனுக்குடன் தண்டிக்கப் படணும்
ஏமாற்றி அதையும் சாதகமாக மாற்றும் மானம் கெட்டவர்கள் ஏமாறணும்
பெற்றோரை மிரட்டி அடிமைப் போல் நடத்துவோர் அடிமைப் படணும்
பொய்யை மெய்யாக்கிப் பேசுவோரின முகத்திரை கிழிக்கப் படணும்
சந்தர்ப்பவாத மனிதப் பதர்களை ஓரங்கட்டி ஒதுக்கி வைக்கணும்
அடக்கமற்று ஆரவாரம் செய்யும் அயோக்கியர்களை அடக்கி வைக்கணும்
பருவ மழை அளவோடு பெய்து பசி பட்டினியைத் தீர்த்து வைக்கணும்
விஞ்ஞான மெஞ்ஞான நிலைகளை ஆக்கப் பூர்வமாக மாற்றி அமைக்கணும்
உண்டியலுக்கு உழைத்தக் காசு மட்டுமே வரும் நிலை வரணும்
இதெல்லாம் நடக்குமா என நகைக்கும் நபர்கள் நடுநடுங்கிப் போகணும்!
- தஞ்சை த இராமநாதன்

கோரிக்கை நனவாக வேண்டுகிறேன்
ReplyDelete🙏
Delete