சேர்ந்தால் ஒன்றாகச் சேருகின்றது பிரிந்தால் ஏழாகப் பிரிகின்றது காலையில் கிழக்குத் திசையில் தோற்றம் மாலையில் மேற்குத் திசைக்கு மாற்றம் அகத்தில் அகச்சிவப்புடன் தோற்றம் புறத்தில் புற ஊதாவுடன் மாற்றம் வெளியினில் நோக்கினால் நீலமான ஒளி உள்ளினுள் நோக்கினால் ஆழமான ஒளி புறக் கண் உணர்வது மாறும் ஒளி அகக் கண் உணர்வது மாற்றும் ஒளி!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment