Saturday, 7 August 2021

பாடி வாடிய பாரதி

 

பாடி வாடிய பாரதி

ஒருபான் வயதினுள் தன்னன்னையை இழந்திட்டார் - அதனுள் கவிதையையும் தந்திட்டார்

இருபான் வயதினுள் மணமாகி தந்தையை இழந்திட்டார்

முப்பானுள் எழுச்சிமிகு கவிபாடி ஏழ்மையில் வாழ்ந்திட்டார்

முப்பான் மும்மூன்றில் இவ்வுலகை விட்டு நல்லுலகை அடைந்திட்டார்

இல்லை...இல்லைவே இல்லை...

பசிப் பட்டிணியிலிருந்து - நிரந்தரமாக பாரதி விடுபட்டார்!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment