கண் கண்ட கடவுள்
ஆக்கிக் காக்க இரு கடவுள்; ஆக்கிக் காக்கும் இது கடவுள்
மற்றக் கடவுள் பலி வாங்கும்; பெற்றக் கடவுள் வலி தாங்கும்
பனி பிணி அயராமல் பணி; அணி மணி பாராமல் பணி
முதியோர் இல்லம் சாபக் கேடு; இதை அறியார் உள்ளம் சவக் கூடு
பந்தா வாழ்வில் முட்டாள் இனம்; ஆதியை மறக்கும் பாவ இனம்
அம்மா அப்பா முதல் சொந்தம்; உயிரோடு கலந்த அசல் சொந்தம்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment