Sunday, 29 August 2021

கண் கண்ட கடவுள்

 

கண் கண்ட கடவுள்

ஆக்கிக் காக்க இரு கடவுள்; ஆக்கிக் காக்கும் இது கடவுள்

மற்றக் கடவுள் பலி வாங்கும்; பெற்றக் கடவுள் வலி தாங்கும்

பனி பிணி அயராமல் பணி; அணி மணி பாராமல் பணி

முதியோர் இல்லம் சாபக் கேடு; இதை அறியார் உள்ளம் சவக் கூடு

பந்தா வாழ்வில் முட்டாள் இனம்; ஆதியை மறக்கும் பாவ இனம்

அம்மா அப்பா முதல் சொந்தம்; உயிரோடு கலந்த அசல் சொந்தம்!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment