Sunday, 29 August 2021

எல்லாமே இறைவனின் செயலா?

 

எல்லாமே இறைவனின் செயலா?

பகிரும் மனம் இல்லாதவருக்கு பெரும் பணத்தைக் கொடுத்துக் கெடுத்தாய்

உண்ண உணவு இல்லாதவருக்கு பசியை நிரந்தரமாய் ஏன் கொடுத்தாய்?

கண்ணீரெல்லாம் வழிந்து வலிமிக்கக் கண்ணில் ஒளி வருவது எப்போது?

அனைவருக்கும் உணவு என்ற சமநிலை உருவாக அருள் புரிவது எப்போது?

பணக்காரன் ஏழையென இயல்புடன் உலகில் இருப்பதில் அநியாயம் இல்லை

ஏழையின் வாழ்வில் ஏற்றமே இல்லை என இருப்பதில்தான் நியாயம் இல்லை

ஆடியும் கத்தி சக்தியைப் பாய்ச்சியும் நோயைத் தீர்ப்பதாய் கடவுளைக் காட்டி பிழைக்கும் ஆசாமிகளே!

பசி தீர்க்கும் யுக்தி கண்டு ஏழையின் பசியைத் தீர்க்கும் வழியைக் காட்டினால் நீங்களும் சாமிகளே!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment