தாயைப்போல பிள்ளை
என்னைவிட நீ அழகாக இருக்கிறாய் என் அன்பு மகளே!
உன்னைவிடவா அழகாக இருக்கிறேன் என் அம்மாச்சி மகளே?
சிரிக்கும்போது பூவாய் மணக்கிறாய் என் செல்ல மகளே!
சிரிக்காமலே சிறப்பாய் இருக்கிறாய் என் அம்மம்மா மகளே!
முடி வளர்ந்ததும் முடிந்து விடுகிறேன் என் அருமை மகளே!
முடியை வளர விட்டால் நானே முடிவேன் என் ஆத்தா மகளே!
படம் எடுத்தாச்சி எழுதிப் படிக்க புறப்படு என் சுட்டி மகளே!
முதலில் பட்டாடையை மடித்து வைத்திடு என் அம்மாயி மகளே!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment