நெஞ்சு பொறுக்குதில்லையே
அறியாதவரெல்லாம் அறிந்த அறிஞைரைப் போல் பிதற்றுவதைப் பார்த்தால் - நெஞ்சு பொறுக்குதில்லை பாரதி
பொல்லாதவர் புவியில் அதிகரிப்பதைப் பார்த்தால் - நெஞ்சு பொறுக்குதில்லை பாரதி
பயன் அடைந்தோரே நன்றி கெட்ட நயவஞ்சகர்களாக மாறுவதைப் பார்த்தால் - நெஞ்சு பொறுக்குதில்லை பாரதி
பணத்தை வைத்துதான் அங்கீகாரம் என்பதைப் பார்த்தால் - நெஞ்சு பொறுக்குதில்லை பாரதி
புகைப் பிடிப்பதோடு மதுவும் குடித்து ஆட்டம் போடும் பெண்டிரைப் பார்த்தால் - நெஞ்சு பொறுக்குதில்லை பாரதி
பாலியல் வன்முறைக் கயவர்கள் அதிகமான நிலையைப் பார்த்தால் - நெஞ்சு பொறுக்குதில்லை பாரதி
சாதி கூடாது என கோஷமிட்டு தன் சாதியின் பெயரிலேயே சங்கடங்களை செய்வதைப் பார்த்தால் - நெஞ்சு பொறுக்குதில்லை பாரதி!
ஆதாயத்திற்காக அசிங்கமான அரசியல் நடத்தும் ஆசாமிகளைப் பார்த்தால் - நெஞ்சு பொறுக்குதில்லை பாரதி
அகத்தின் அழுக்கை முகத்தில் காட்டாமல் நன்றாக நடிப்பவர்களைப் பார்த்தால் - நெஞ்சு பொறுக்குதில்லை பாரதி
எல்லாவற்றையும் விட...
சாமியாரானால் சம்பாதிக்கலாம் என்ற நிலையைப் பார்த்தால் - நெஞ்சு பொறுக்குதில்லை பாரதி
ஆமாம் பாரதி!
"நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்" என்றீரே!
அது உண்மைதான் பாரதி!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment