பதரெல்லாம் பறக்கும்
முதிர்ந்தப் பயிரை அறுத்து அடுக்கி; அரி அரியாய் வரிசையில் வைப்பர்
அடுத்த நாள் அடி மாற்றி அரி அடுக்கி; கதிரைக் கட்டுக் கட்டாய்க் கட்டுவர்
கட்டியக் கட்டை கட்டோடு தூக்கி; தலையில் சுமந்து நிமிர்ந்து நடப்பர்
கட்டுமேல் கட்டை களத்தில் வைத்து; அடியாய் அடித்து நெல் உதிர்ப்பர்
அடித்த நெல்லை குவித்து வைத்து; கூடை கூடையாய் நெல் தூற்றுவர்
கருக்கை நெல்லை காற்றில் பிரித்து; முறம் கொண்டு மேலும் பிரிப்பர்
பொலிவோடு பொலியில் வைத்து; படி மரக்கால் கொண்டு அளப்பர்
அளந்த நெல்லை மூட்டைக் கட்டி; வீட்டையும் நாட்டையும் காப்பர்
நெல் ஆக்கும் தொழிலை செய்து; உயிர்க் காக்கும் சோறைத் தருவர்
வியர்வை சிந்தியவர் அழக் கூடாது; அழுதால் உலகில் வாழ முடியாது!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment