Friday, 6 August 2021

பதரெல்லாம் பறக்கும்

 

பதரெல்லாம் பறக்கும்

முதிர்ந்தப் பயிரை அறுத்து அடுக்கி; அரி அரியாய் வரிசையில் வைப்பர்

அடுத்த நாள் அடி மாற்றி அரி அடுக்கி; கதிரைக் கட்டுக் கட்டாய்க் கட்டுவர்

கட்டியக் கட்டை கட்டோடு தூக்கி; தலையில் சுமந்து நிமிர்ந்து நடப்பர்

கட்டுமேல் கட்டை களத்தில் வைத்து; அடியாய் அடித்து நெல் உதிர்ப்பர்

அடித்த நெல்லை குவித்து வைத்து; கூடை கூடையாய் நெல் தூற்றுவர்

கருக்கை நெல்லை காற்றில் பிரித்து; முறம் கொண்டு மேலும் பிரிப்பர்

பொலிவோடு பொலியில் வைத்து; படி மரக்கால் கொண்டு அளப்பர்

அளந்த நெல்லை மூட்டைக் கட்டி; வீட்டையும் நாட்டையும் காப்பர்

நெல் ஆக்கும் தொழிலை செய்து; உயிர்க் காக்கும் சோறைத் தருவர்

வியர்வை சிந்தியவர் அழக் கூடாது; அழுதால் உலகில் வாழ முடியாது!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment