வீடு மாடு நாடு
மாட்டை வைத்தே மாட்டுப் பொங்கல்; மாடே இல்லாமல் வீட்டுப் பொங்கல்
உழுத மாட்டை ஓட்டி விட்டோம்; உழாத மாட்டை ஓட விட்டோம்
இல்லாதது இருப்பதும் மடமை; இருந்ததை மறந்ததும் மடமை
கலையை துறந்ததும் மடமை; காளையை மறந்ததும் மடமை
மாட்டைக் கட்டி மாட்டுப் பொங்கல்; மாட்டைக் காட்டி நமக்குப் பொங்கல்
வீட்டோடு மாடு வருவது எக்காலம்? திருஷ்டி சட்டி தூக்குவது எக்காலம்?
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment