Thursday, 19 August 2021

மனித நேயமும் அநியாயமும்

 

மனித நேயமும் அநியாயமும்

அனைவருக்கும் உணவு வேண்டுமென நினைத்தால் அது மனிதநேயம்

தனக்கு மட்டும் இருந்தால் போதுமென நினைத்தால் அது அநியாயம்

பசியோடு இருப்போர்க்கு பசியாறக் கொடுத்தால் அது மனிதநேயம்

பசியால் வாடுவோரை பரிதவிக்க விட்டு பசியாமலே புசிப்பது அநியாயம்

போராடுபவரை அழைத்துப் பேசி பிரச்சினையைத் தீர்த்தால் மனிதநேயம்

வருந்தி சாகும்வரை போராட விட்டு வஞ்சனை செய்தால் அது அநியாயம்

அடுத்த நாட்டில் அபாயமென்றால் முன் சென்று உதவுவது மனிதநேயம்

அனாதையாகி இறக்கும் போது இங்கே அகதியாக வா என்பது அநியாயம்

முடியும்போது முடிந்ததை செய்து சார்ந்தோரைக் காப்பது மனிதநேயம்

உதவியவர்க்கு நன்றியோடு இல்லாது நயவஞ்சகம் செய்வது அநியாயம்

கன்று நட்டு நீர்ப் பாய்ச்சி மரமாக்கி சந்ததியைக் காப்பது மனிதநேயம்

நட்டவனை கெட்டவன் மொட்டை அடித்து காசை தனக்காக்குவது அநியாயம்

அன்பால் அரவணைத்து மனிதரைக் காத்தால் அது மனிதநேயம்

ஆசையின் போதையில் சூழலுக்கேற்ப ஆட்டம் போட்டால் அது அநியாயம்!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment