செய்நன்றி அறிதல் (101 - 110)
உதவி செய்யாமையும் நல்லதல்ல; உதவி நினையாமையும் நல்லதல்ல
தருணத்தில் தாகம் தீர்த்தார் நல்லார்; தரணியில் தலை சிறந்த நல்லார்
அறியார்க்கு உதவியோர் உயரியோர்; அளவில்லா அன்பினை உடையோர்
சிறு உதவி செய்து பிதற்றுவோர் - பேருதவி யாதென அறியா கீழோர்
திரும்ப உதவுவோர் உதவி பெரிது; முன்பே உதவியோர் உதவி மிகப் பெரிது
குற்றமற்றார் உறவை போற்றி வாழ்; துயரை நீக்கியவரை வணங்கி வாழ்
பல பிறவியேனும் எடு துணிந்து; துன்பம் துடைத்தாரை நினைந்து
நன்றியை என்றும் நீ மறக்காதே; தீமையை மறக்க நீ மறக்காதே
ஒருவர் கொடும் செயலை மறந்திடு; அவர் உதவி எண்ணி வாழ்ந்திடு
பல பாவமாயினும் நீ தப்பிக்கலாம்; நன்றி மறந்தால் தப்பவே முடியாது!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment