Friday, 20 August 2021

செய்நன்றி அறிதல் (101 - 110)

 

செய்நன்றி அறிதல் (101 - 110)

உதவி செய்யாமையும் நல்லதல்ல; உதவி நினையாமையும் நல்லதல்ல

தருணத்தில் தாகம் தீர்த்தார் நல்லார்; தரணியில் தலை சிறந்த நல்லார்

அறியார்க்கு உதவியோர் உயரியோர்; அளவில்லா அன்பினை உடையோர்

சிறு உதவி செய்து பிதற்றுவோர் - பேருதவி யாதென அறியா கீழோர்

திரும்ப உதவுவோர் உதவி பெரிது; முன்பே உதவியோர் உதவி மிகப் பெரிது

குற்றமற்றார் உறவை போற்றி வாழ்; துயரை நீக்கியவரை வணங்கி வாழ்

பல பிறவியேனும் எடு துணிந்து; துன்பம் துடைத்தாரை நினைந்து

நன்றியை என்றும் நீ மறக்காதே; தீமையை மறக்க நீ மறக்காதே

ஒருவர் கொடும் செயலை மறந்திடு; அவர் உதவி எண்ணி வாழ்ந்திடு

பல பாவமாயினும் நீ தப்பிக்கலாம்; நன்றி மறந்தால் தப்பவே முடியாது!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment