வாழ்க்கைப் பயணம்
பாயை எல்லாம் சுருட்டி எடுத்து
நாற்காலியை எல்லாம் அடுக்கி எடுத்து
சுருட்டியப் பாயை மடியில் வைத்து
அடுக்கிய நாற்காலியை தொங்க வைத்து
சுருட்டியப் பாயில் உட்கார வைத்து
மனையாள் சுமையை சுகமென நினைத்து
சுயத் தொழிலை மேலும் தொடர நினைத்து
பாதுகாப்பற்ற பயணத்தில் அர்த்தமற்ற கெத்து!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment