அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும்
சாலைக்கு அந்தப் பக்கம் பசுமை; சாலைக்கு இந்தப் பக்கம் வறுமை
அந்தப் பக்கம் மட்டும் வாழ்வது அநீதி; இந்தப் பக்கமும் வாழ கிடைக்குமா நீதி?
அங்காவது விளைகிறதே மகிழ்ச்சி; இங்கும் விளைந்தால் அதி மகிழ்ச்சி
ஒரு சாராருக்கு மட்டும் வாழ்வு சோகம்; மறு சாராரும் சேர்ந்து வாழ்ந்தால் சுகம்!
ஒரு பக்கம் மட்டும் வாழ்வது அவமானம்; மறு பக்கமும் வாழ தேவை வருமானம்
சேர்ந்து பகிர்ந்து வாழ்ந்தால் நேசம்; பிரிந்து ஒளிந்து வாழ்ந்தால் மோசம்!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment