தஞ்சை இராசராச சோழன்
பெரிய கோயில் கண்ட தஞ்சை பெரிய மதில் கொண்ட தஞ்சை
மக்களுக்காக மண் ஆண்ட மன்னன் மன்னர்களில் மன்னாதி மாமன்னன்
நன்செய் புன்செய் கொண்ட மண் நன் செயல்களின் மன்னன் ஆண்ட மண்
உயரிய மானம் காத்த மண் தற்காப்பில் வீரம் காத்த மண்
சுத்த ஆன்மீகம் தந்த மண் மிகுந்த செல்வம் வாய்ந்த மண்
தமிழுக்காக சரஸ்வதி மகால் அங்கே அரணுக்காக ஆழ அகழியும் அங்கே
சங்கீத வளம் மிக்க திருவையாறு நெல் வளம் கொழிக்க பெரியாறு
மண் வெட்டி சாரம் கட்டிய ஊர் அது சாரப்பள்ளம் எனும் ஊர்
வேங்கைப் பள்ளம் பெரும் குளம் காசாங்குளம் எம்குல பேரின் குளம்
ஆலை இல்லா ஆலய தஞ்சை அபூர்வ மன்னனின் ஆனந்த தஞ்சை!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment