Thursday, 8 July 2021

மழை

 

மழை

தண்ணிப் பட்டு உடலில் குளிர்ச்சி!

தலையில் பட்டு மனதில் மகிழ்ச்சி!

கண்ணை மூடி காணும் நிகழ்ச்சி!

கானம் பாட நினைக்கும் தங்கச்சி!

செடியும் ஆடும் கொடியும் ஆடும்!

புல்லும் ஆடும் காலும் ஆடும்!

குளமும் நிறைக குட்டையும் நிறைக!

வளமும் நிறைக மனமும் நிறைக!

மழையின் வழி தெரியும் முத்து!

விவசாயி வழி விளையும் முத்து!

மழையில்லா வானம் பலனில்லை!

மதியில்லா மனிதம் பயனில்லை!

நல்லவர் சிலரால் பெய்யும் மழை!

கெட்டவர் பலரால் கொல்லும் மழை!

சிறுதுளி வெள்ளம் ஆறு ஆனது!

ஆறு சேர்ந்து ஏழுகடல் ஆனது!

மழையில் நனைய மலர்கள் மலரும்!

நனைந்த நினைவு நமக்கும் மலரும்!

வானம் கருத்து மழையாய் மாறும்!

மனிதன் கருத்து பொழிவாய் மாறும்!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment