Thursday, 1 July 2021

சிலப்பதிகார வரிகள்




"போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி

வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட" - சிலப்பதிகாரம்

விளக்கம்:

கோவலனும் கண்ணகியும் மதுரை மாநகரத்திற்குள் நுழைய முற்படும்போது இயல்பாகக் காற்றிலாடும் தோரண வாயிற் கொடிகளைக் கவிஞர் தம் கற்பனையினால் கோவலன் மதுரையில் கொல்லப்படுவான் என்று முன்னமே அறிந்து வர வேண்டாம் என அக்கொடிகள் எச்சரிப்பதாகக் குறிப்பேற்றிக் கூறுவார். 

Ref: https:/store.tamillexicon.com

எனது விளக்கம்: நல்லவனாகிய நீ வழிதவறி சென்று விட்டாய். உனது நேரம் முடிந்து விட்டது. வா வா... நீ போக வேண்டிய நேரம் வந்து விட்டது வா வா... என்பதைப் போன்று, கொடிகள் அசைந்து அசைந்து ஆடி அழைத்ததாம்!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment