பணிவான பண்போடு வலிமையான மாடு பலனை எதிர்பாராத அருமையான மாடு
மாட்டின் இயற்கையான வீடுதான் காடு இயற்கையான காடு போனதால் வீடேதான் காடு
மாடு மனிதரிடம் படுவது படாத பாடு மாட்டின் உழைப்பால் விடாது வாழுது வீடு
நேரம் வேளையைப் பார்க்காது மாடு எந்நேரமும் வேலையைப் பார்க்கவே மாடு
ஆள் இல்லையேல் அயராமல் ஓடும் மாடு ஆள் இருந்தால் அயர்ந்தாலும் ஓடும் மாடு
புல் சுமந்தால் எளிதாக இழுக்கும் மாடு கல் சுமந்தால் கடினமாக இழுக்கும் மாடு
அம்மா என்று அர்த்தத்தோடு கத்தும் மாடு சும்மா என்றுமே அர்த்தமற்று கத்தாது மாடு
மாட்டோடு வாழ்ந்தால் அது விபரமான வீடு ஓட்டோடு வீழ்ந்தால் அது விபரமற்ற நாடு!
(குறிப்பு: ஓட்டு = வாக்கு)
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment