பனையின் பயன்கள்
நுங்கு வேண்டாம் என்போர்க்கு கள்ளாகும் பொன்னிறத்தில் இயற்கை இனிப்புடன் கற்கண்டாகும்
நுங்கை பதத்தோடு வெட்டாதப் போது பழமாகும் கரும் பழமானாலும் நாரோடு சேர்ந்து மங்களகரமாகும்
பறிக்காத பனம் பழம் கொட்டி கொட்டை கன்றாகும் கன்றாகாமல் தேவைப்பட்டால் பனங் கிழங்காகும்
கரு கருவென பச்சைக் கன்று பனங் குட்டியாகும் பனையின் கருக்கு மட்டை பனைக்கு தற்காப்பாகும்
பனை ஓலை பலவித கைவினைப் பொருளாகும் கஞ்சியைக் குடிக்க பனை ஓலை தொன்னையாகும்
பனை ஓலையோடு மட்டை ஏழைகளின் கூரையாகும் ஊற வைத்து உரித்தால் கருக்கு மட்டை கயிறாகும்
முற்றிய மரம் வீட்டுக்கு உறுதியான உத்திரமாகும் நிலை இல்லா நிழலுடைய அத்தனையும் பயனாகும்!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment