Tuesday, 29 June 2021

பனையின் பயன்கள்

 

பனையின் பயன்கள்

நுங்கு வேண்டாம் என்போர்க்கு கள்ளாகும் பொன்னிறத்தில் இயற்கை இனிப்புடன் கற்கண்டாகும்

நுங்கை பதத்தோடு வெட்டாதப் போது பழமாகும்                                                                    கரும் பழமானாலும் நாரோடு சேர்ந்து மங்களகரமாகும்

பறிக்காத பனம் பழம் கொட்டி கொட்டை கன்றாகும்                                                  கன்றாகாமல் தேவைப்பட்டால் பனங் கிழங்காகும்

கரு கருவென பச்சைக் கன்று பனங் குட்டியாகும்                                                  பனையின் கருக்கு மட்டை பனைக்கு தற்காப்பாகும்

பனை ஓலை பலவித கைவினைப் பொருளாகும்                                            கஞ்சியைக் குடிக்க பனை ஓலை தொன்னையாகும்

பனை ஓலையோடு மட்டை ஏழைகளின் கூரையாகும்                                                                ஊற வைத்து உரித்தால் கருக்கு மட்டை கயிறாகும்

முற்றிய மரம் வீட்டுக்கு உறுதியான உத்திரமாகும்                                                                நிலை இல்லா நிழலுடைய அத்தனையும் பயனாகும்!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment