கல்லும் காலமும்
அம்மி மேல் குழவி இருப்பது நியாயம் குழவி மேல் அம்மி இருப்பது எப்படி நியாயம்?
ஆட்டுக்கல் மேல் குழவி இருப்பது நியாயம் குழவி மேல் ஆட்டுக்கல் இருப்பது எப்படி நியாயம்?
ஒன்று வாங்க அடுத்தது சும்மா இனாமா?ஒன்றாகக் கலந்து விட்டதால் ஒரே இனமா?
இது அரைக்கப் பயன்படப்போகும் கல்லா?காட்சிக்காக காண வைக்கப்பட்டப் பொருளா?
அம்மியில் அரைத்தப் பின் துவையலில் இருக்கும் ருசி ருசித்தப் பின் சற்று நேரத்தில் எடுக்கும் பசி
மாங்காயை இதில் நசுக்கி சுவைப்பது சுவை உப்பும் மிளகாயும் சேர்ந்தால் அது தனி சுவை
ஆட்டுக்கல்லில் நீரோடு இருந்தால் ஈர மாவு திருவையில் உலர்வோடு இருந்தால் கார மாவு
இட்லி தோசை எல்லாம் வந்தது அங்கிருந்தே முறுக்கு அதுரசம் எல்லாம் வந்தததும் அங்கிருந்தே
காலம் மாற கருவிகளும் மாறின விற்பவர் மாறி விற்பனையும் மாறின
பழையனக் கழிதலில் நமக்கு மெய் வெற்றியா? புதியனப் புகுதலில் நமக்கு நோய்த் தொற்றியா?
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment