நம் மண்ணோடு ஒன்றி வாழ்வது நற்காலம் நம் மனித வாழ்வு பெற்றிடுவது பொற்காலம்
நம் மண்ணைக் காத்தால் என்றும் வாழ்வு நம் மண்ணை மறந்தால் என்றும் தாழ்வு
நம் மண்ணுக்கு ஏற்றத் தொழிலால் ஏற்றம் நம் மண்ணை மாற்ற நினைத்தால் ஏமாற்றம்
எங்கெங்குக் காணினும் இந்த மண் ஒன்றே என்றுமே சொந்தக் காணி மண் நன்றே
நாம் மண்ணோடு மண்ணாகும் முன்னே நாம் உணர்வோடு ஒன்றாவோம் அதற்கு முன்னே!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment