Saturday, 26 June 2021

எங்கு செல்வேன் நான்?

 

எங்கு செல்வேன் நான்?

தாயை இழந்தேன் தந்தையை இழந்தேன் எப்போது இழந்தேன் என்பதையும் மறந்தேன் அழுதேன் அழுதேன் அயரும்வரை அழுதேன் என் கண்ணின் கண்ணீரையும் இழந்தேன்

வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வந்தோம் பிழைப்புக்காக                                                            இங்கேயேயே காத்திருக்கேன் உதவுவோரின் அழைப்புக்காக

வந்தாரை எல்லாம் வாழ வைக்கும் நிலமே வந்த என்னையும் வாழ வைத்தால் நலமே யாதும் ஊரே என்றிருரைத்த நிலமே    யாவரும் கேளிர் என சொன்னால் நலமே! 

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment