தன்மானம் வேண்டும்
கந்தையை கசக்கிக் கட்டினோம் கூழை குளித்துக் குடித்தோம்
சுத்தமான செயல் நித்தமும் சோறு போடும் சுத்தமான நாவோ சந்தத்துடன் பாடல் பாடும்
வீட்டுக்கு ஒரு கழிவறை நிச்சயம் வேண்டும் கழிவறை சுத்தமும் நிச்சயம் வேண்டும்
திறந்த வெளிக் கழிவு சுத்தமாக வேண்டாம் வீதியோரக் கழிப்பும் மொத்தமாக வேண்டாம்
பேச்சில் மட்டும் மானம் காப்பது அவமானம் செயலில் காட்டி இனம் காப்பது தன்மானம்
புதரும் வாய்க்காலும் குடத்தடியும் இல்லை கைபேசி இருக்கு கழிக்கக் கழிவறை இல்லை
இஷ்டப்படி கண்ட இடத்தில் கழிக்கும் ஆணே பெண்ணின் கஷ்டத்தை உணராதது ஏனோ?
மானம் கெட்ட மனித சமுதாயமே ஒழிக மானம் மிக்க மனித சமுதாயமே வருக
கொடுமை கொரோனாவோடு முடிக சொல்லும் செயலும் ஒன்று படுக
மாற வேண்டியது தனிநபர் கடமை சமுதாயம் என்பது தனிநபர் உடமை!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment