Thursday, 17 June 2021

போற்றுவோரும் தூற்றுவோரும் நாமே!

 கோபமும் குணமும் சமம் கொண்டார் யார்?அகமும் புறமும் சமம் கண்டார் யார்?

தர்மம் பண்ணின மனதை மறப்பவர் யார்?        பணம் பண்ணாத மனதை மதிப்பவர் யார்?

இரை தேட இயலாத வறியார் யார்?                      இறை தேட முயலாத சிறியார் யார்?

இருக்கும்போது இகழைப் பெறாதவர் யார்?      இறக்கும்போது புகழைப் பெறுபவர் யார்?

பார்க்கும்போது போற்றாத உறவினர் யார்?    பார்க்காதபோது தூற்றாத மரபினர் யார்?

தன்னிலை நோக்கி அகம் பார்ப்பார் யார்?தனிநிலை நோக்கி புறம் பார்க்காதார் யார்?

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment