Thursday, 17 June 2021

நேரோடு நேராய்ப் பேசிய அண்ணா

 

நேரோடு நேராய்ப் பேசிய அண்ணா

ஆளும்வரை ஆளுபவர் கட்சியின் ஆட்சி அன்றுமுதல் அண்ணாவின் கட்சிதான் ஆட்சி

 பிரிந்து பிறந்தன பலவிதமானக் கட்சி அனைத்திலும் அண்ணாவின் படக் காட்சி

புதுமைப் பிறந்த இடம் அண்ணாவின் காஞ்சி ஆன்மிகத் தத்துவம் சிறந்த இடமும் காஞ்சி

ஏழையின் சிரிப்பால் மலர்ந்தக் காஞ்சி              மலர்ந்து தமிழ் மணம் பெற்றதும் காஞ்சி

அண்ணனாக வாழ்வில் வாழ்ந்து சென்றார் அண்ணாவாகவே வாழ்வோரை வென்றார்

உடுத்தினார் தனக்கென ஒரு தனி உடை நடத்தினார் தனக்கென ஒரு தனிப் படை

தமிழ்ப் பேச்சிலும் மிகுந்து நிற்கும் நகை நேரோடு நேராய் ஆங்கிலப்  பேச்சிலும் மிகை

மேடைப் பேச்சில் தன் பாணி உருவாக்கினார் சொல் வீச்சில்  தனிப் பாணி உருவாக்கினார்

தமிழோடு ஒப்பிட்டார் சீறிப் பாயும் புலியை    டில்லி பெற்றது தீராப் பெரும் கிலியை

ஒரு விரல் புறத்தைக் காட்டும் தத்துவம்              மூன்று விரல் அகத்தைக் காட்டும் தத்துவம்!

- தஞ்சை த இராமநாதன்


No comments:

Post a Comment