காற்று வாக்கில் வாக்கைப் பற்றி
வாக்கைப் போடப் போகிறவருக்கோ காசால் வெட்டி விடுகிறார்களாம்
வாக்கைப் போட்டு முடித்தவருக்கோ மையால் குத்தி விடுகிறார்களாம்
கத்திச் சுத்தாத புத்தி இல்லாதவர்
துண்டைக் காட்டி வெல்கிறாராம்
சுத்திக் கத்தும் யுக்தியே இல்லாதவர் தொண்டையும் கட்டி தோற்கிறாராம்
சின்னத்தைப் பார்ப்பவர்கள் வேட்பாளர் எண்ணத்தைப் பார்த்து வாக்களிப்பதே இல்லையாம்
சன்மானத்தைப் பார்ப்பவர்கள் தமிழனின் தன்மானத்தைப் பார்த்து வாக்களித்ததே இல்லையாம்!
உண்மையா?
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment