Sunday, 1 March 2026

ஈதலில் உயர்வு கொள்

ஈதலில் உயர்வு கொள்

கொடுத்த ஈதலில் உயர்வு கொண்டார் தரணியில் குறைவிலும் குறைவே
கொடுத்துக் கொடுத்து நொடித்தோர் தரணியில் கூடுதலிலும் கூடுதலே

வீட்டைக் கோட்டை விட்டு நாடு நாடென ஓடியோர் வறுமையில் வாடுவர்
வாங்கி வாங்கி வறுமையைக் கடந்தோர் கொடுத்தவரை ஒருமையில் சாடுவர்

கொடுக்கும் உள்ளம் உள்ளாரிடம் கொடுக்க செல்வம் சேருவதுமில்லை
கொடுக்காத உள்ளம் உள்ளாரிடம் கோடிச் செல்வம் சேராமலுமில்லை

அளவோடு பொருளைக் கொடுத்து வாழ்ந்தால் ஈதலால் உயர்வே
உள்ளதை எல்லாம் சுரண்டிக் கொடுத்து வீழ்ந்தால் ஈதலால் தாழ்வே

- தஞ்சை த.இராமநாதன்
   சிங்கப்பூர்

No comments:

Post a Comment