ஈதலில் உயர்வு கொள்
கொடுத்த ஈதலில் உயர்வு கொண்டார் தரணியில் குறைவிலும் குறைவே
கொடுத்துக் கொடுத்து நொடித்தோர் தரணியில் கூடுதலிலும் கூடுதலே
வீட்டைக் கோட்டை விட்டு நாடு நாடென ஓடியோர் வறுமையில் வாடுவர்
வாங்கி வாங்கி வறுமையைக் கடந்தோர் கொடுத்தவரை ஒருமையில் சாடுவர்
கொடுக்கும் உள்ளம் உள்ளாரிடம் கொடுக்க செல்வம் சேருவதுமில்லை
கொடுக்காத உள்ளம் உள்ளாரிடம் கோடிச் செல்வம் சேராமலுமில்லை
அளவோடு பொருளைக் கொடுத்து வாழ்ந்தால் ஈதலால் உயர்வே
உள்ளதை எல்லாம் சுரண்டிக் கொடுத்து வீழ்ந்தால் ஈதலால் தாழ்வே
- தஞ்சை த.இராமநாதன்
சிங்கப்பூர்

No comments:
Post a Comment