அன்பற்ற அறிவற்றோரைக் கண்டால் பக்குவத்தோடு இருக்க வேண்டும் மௌனம்
ஆணவத்தோடு ஆர்ப்பரிப்போரைக் கண்டால் காணாததைப் போல் இருக்க வேண்டும் மௌனம்
இறுமாப்போடு இரைச்சல் செய்வோரைக் கண்டால் கேட்காததைப் போல் இருக்க வேண்டும் மௌனம்
உருப்படாமல் ஊதாரியாகத் திரிவோரைக் கண்டால் உதறித் தள்ள வேண்டும் மௌனம்
எடுத்தெறிந்துப் பேசும் எடுபட்டோரைக் கண்டால் எதிர்த்துப் பேசாமல் இருக்க வேண்டும் மௌனம்
ஏளனம் செய்து ஒடுக்க நினைப்போரை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் இருக்க வேண்டும் மௌனம்
மௌனமே மதித்துப் போற்றும் வகையில் அமைதியாய் இருக்க வேண்டும் மௌனம்!
- தஞ்சை த.இராமநாதன்

நன்று
ReplyDelete🤝
ReplyDelete