காலக் கண்ணாடி நம் கண்முன் ஓடி நினைவுகளைக் காட்டும் பின்னாடி
வயதாகிப் பார்க்கும் நிலைக் கண்ணாடி
நினைவுகளைக் கூட்டும் நம் முன்னாடி
அன்று இளமையோடு உணர்வைக் கூட்டியதோ முகம் காணும் கண்ணாடி
இன்று முதுமையோடு உண்மையைக் காட்டுவதோ அகம் காட்டும் கண்ணாடி
இளமையில் கண்ணாடி போடாது கண்ணாடியைப் பார்ப்பதில் கில்லாடி
முதுமையில் கண்ணாடிப் போட்டு கண்ணாடியைப் பார்ப்பதோ தள்ளாடி
காந்தி கண்ணாடியோடு திரளாகச் சென்று நாட்டுக்குச் சுதந்திரத்தைத் தேடினார்
இன்று திரளாக திரையரங்கம் சென்று திரையில் காந்தி கண்ணாடியைத் தேடினர்!
- தஞ்சை த.இராமநாதன்

நல்ல கருத்தான கவிதை
ReplyDelete🙏
DeleteNatural (reality)
ReplyDelete🙏
Deleteசிறப்பு
ReplyDelete🙏
Delete👌
ReplyDelete🙏
Delete