எல்லாமே எந்தன் ஈசன் தந்த சொத்து
ஈசனே எம் சொத்தாகி வந்தது கெத்து
ஆதிசிவனான ஈசனால் எமக்கு வந்தது தரம்
சிவநேசனான எமக்கு ஈசன் தந்தது வரம்
உள்ளத்தின் ஒலியாக வந்தது எந்தன் ஆதிசிவன்
இல்லத்தில் ஒளியாக வருவதும் எந்தன் அதேசிவன்
விழுந்தால் எழ வைத்தது எந்தன் ஆதிசிவன்
எழுந்ததும் வாழ வைப்பதும் எந்தன் அதேசிவன்
மனதைப் புரிய வைத்ததும் எமது ஈசனே
மனிதரை அறிய வைப்பதும் எமது ஈசனே
தியாகம் செய்ய வைத்ததும் எமது ஈசனே
தியானம் செய்ய வைப்பதும் எமது ஈசனே!
- தஞ்சை த.இராமநாதன்

👌
ReplyDelete🙏
Delete