ஏழ்மையைப் போல் வாட்டி விடுவது கொடுமையான வெய்யிலின் செயல்
செழுமையைப் போல் காட்டி விடுவது கடுமையான மழையின் செயல்
வெய்யிலைக் கண்டு வெளியில் செல்ல தயக்கம் காட்டுவோர் அதிகமில்லை
மழையைக் கண்டு வெளியில் செல்ல தயக்கம் காட்டுவோர் குறைவுமில்லை
வெய்யிலைச் சமாளிக்க வெறும் நீரைக் கொண்டே சமாளிக்க முடிம்
மழையைச் சமாளிக்க வெந்நீரைக் கொண்டா சமாளிக்க முடியும்?
பலநாள் கொளுத்தும் வெய்யிலின் சூடோ இரவில் அடங்காமல் இல்லை
ஒரேநாளில் கொட்டும் மழையின் பாடோ
இரவிலும் அடங்குவதாக இல்லை!
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment