ஜூ ஜூபி
செல்லடி எனக் கேட்டதும் தனக்குக் கிடைத்தது சொல்லடி என்றவள்
செல்லம்மா எனக் கேட்டதும் தனக்குக் கிடைத்தது செல்லமடி என்கிறாள்
தள்ளடா எனச் சொன்னதும் தள்ளாதுத் தள்ளாடித் தடுமாறி நின்றவன்
தள்ளாத வயதில் தள்ளியே நின்றாலும் தள்ளாமலே தள்ளாடி நிற்கின்றான்
பணம் கிடைக்குமாயின் பிணத்தைவிடப்
பலமாகப் பல்லைப் பிளக்கின்றான்
பயன் கிடைக்காததாயின் பல் இளித்துப்
பழகியதைக் கனவாகக் காண்கின்றான்!
- தஞ்சை த.இராமநாதன்

Super
ReplyDelete🤝🤝
Delete