மறக்க முடியாத மாரிக்கண்ணு
ஓடி ஆடி விளையாடிச் சுற்றி வந்தாலும் அதிஷ்டக்காரனென முதலில் சாக்கைப் பிடிக்கச் சொல்லும் என் அப்பாயி
சாக்குப் போக்குச் சொல்லாமல் சந்தைக்குப் போகும் சாக்கைப் பிடித்தவுடன் பிடித்தபடி ஓடி விடுவான் அப்பாடி
எட்டு வயதினிலே கண்ணிலே கண்ணில் கட்டி வந்ததால் கண்ணை மறைத்து வலியைக் கொடுத்திடும்
ராமராசு பக்கத்தில வாய்யா என கூப்பிட்டு கூப்பிட்டு தினமும் என் கண்ணை என் அப்பாயி பார்த்திடும்
கண்ணைக் காட்டிக் காட்டி நான்காவது நாள் கட்டிப் பழுத்ததைப் பார்த்திடும் என் அப்பாயி
ரொம்ப கிட்டக் கூப்பிட்டு நாக்கை வைத்து கட்டியை வழித்து எடுத்திடும் என் அப்பாயி
கண்ணில் கட்டியை நீக்கியதை எண்ணினால் நெஞ்சு வலிக்க அழுவேன் என் அப்பாயி
இருந்தாலும்,
என் கண்ணீரைத் துடைக்க என் கையே உதவுவதால் நீ கவலைப்பட வேண்டாம் என் மாரிக்கண்ணு அப்பாயி!
- தஞ்சை த.இராமநாதன்

பாசம் பரிவு அரவணைப்பு மிக உன்னதமான ஒன்று!
ReplyDelete🙏🙏
Delete