மூன்றின் முக்கியத்துவம்
முதலிலேயே கோணமானால் அது முற்றிலும் கோணமாகும்
மூன்றும் கோணமானால் அது முதலிலேயே முக்கோணமாகும்
மூன்று கனிகளானால் அது நமக்குப் பிடித்த முக்கனிகளாகும்
மூன்று முனைகளானால் அது நமக்குப் பிடிக்க மும்முனைகளாகும்
மூன்று வண்ணங்களானால் அது வெளிப்படும் மூவண்ணமாகும்
மூன்று குணங்களானால் அது
வெளிப்படும் முக்குணமாகும்
மூன்று பாகங்களானால் அது பிரிந்தபின் முப்பாகமாகும்
மூன்று போகங்களானால் அது விளைந்தபின் முப்போகமாகும்
மூன்று சங்கங்களானால் அது சங்ககாலங்களின் முச்சங்கமாகும்
மூன்று சந்திப்புகளானால் அது அந்தந்தக் காலங்களில் முச்சந்தியாகும்
மூன்று கலைகளானால் அது முக்கியமான முக்கலையாகும்
மூத்த மொழியாததால் அதில் ஐக்கியமானது முத்தமிழாகும்!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment