படாதபாடு படுவோர்
படாதபாடு பட்டுப் பட்ட பாட்டால் பலன் அடைந்த பலபேர் அடைந்த பலனை அறவே மறக்கின்றார்
படாதபாடு பட்டு பயனை அடையாத சிலபேர் அடைய வேண்டிய பயனை அறவே துறக்கின்றார்
பாடாதி வாழ்வை வாழ்ந்தாலும்
பந்தா செய்து பகல் வேடமிட்டு பலபேர் பண்பற்று மானங்கெட்டு வாழ்கின்றார்
பண்பான வாழ்வால் வீழ்ந்தாலும்
மனதில் பட்டதைப் பேசிவிட்டு சிலபேர்
பணமற்று மானத்தோடு வாழ்கின்றார்!
- தஞ்சை த இராமநாதன்

நன்று
ReplyDelete🙏🙏
ReplyDeleteஉண்மை
ReplyDelete🤝🤝
Delete