போராட்டம்
போராட எண்ணம் இல்லாதவர்களும் போராடும் நிலைக்கு வந்தது ஏன்?போராடுவோரைப் போராடா வண்ணம் போராடிக் காக்கச் செல்லாததும் ஏன்?
உழுதுண்டு வாழ்ந்து முன் செல்பவர் போராடும் நிலைக்கு வந்தது ஏன்?
தொழுதுண்டு வாழ்ந்து பின் செல்பவர் போரிடும் நிலைக்குச் சென்றதும் ஏன்?
போராடுமுன் தடுக்க முயலாமல்
போராடும்போது தடுக்க முயல்வது ஏன்?
போராடியபின் கொடுக்க முயல்வதை
போராடுமுன் கொடுக்க முயலாததும் ஏன்?
- தஞ்சை த இராமநாதன்

Nice
ReplyDelete🤝🤝
Delete