Wednesday, 10 January 2024

இல்லை...இல்லவே...இல்லை

 

இல்லை...இல்லவே...இல்லை

சொந்தத்திற்கு உடன்பட்டு பந்தத்திற்குக் கடன்பட்டு வாழ்வோர் கோமாளியா?

பாசத்திற்கு உதைபட்டு நேசத்திற்கு
வதைபட்டு வாழ்வோர் ஏமாளியா?

ஊரையும் ஏமாற்றி உற்றாரையும் ஏமாற்றி வாழ்வோன் நல்லவனா?

பொய்யையும் உரைத்து மெய்யையும் மறைத்து வாழ்வோன் வல்லவனா?

நல்லவர்கள் நாடெல்லாம் நலிவது கலியுகத்தில் கட்டாய கட்டமா?

கொடியவர்கள் வீடெல்லாம் குளிர்வது காசு பணத்தின்
கொட்டமா?

- தஞ்சை த இராமநாதன் 

2 comments: