Thursday, 7 September 2023

பெரும்பாலும் பெருமாளும்

பெரும்பாலும் பெருமாளும் 

பெருமாளைப் பெருமாளென வணங்கி பெரும்பாலும் பெருமாளே என்பர் 
பெருமாளைத் திருமாலென வணங்கி பெரும்பாலும் திருமாலே என்பர் 

பெரும் மாலோ சிறு மாலோ ஒரு மால் வேண்டி பெருமாளிடமும் வேண்டலாம் 
லுலு மால் வேண்டி பெரும் மாலையைச்            சூடி திருமாலிடமும் வேண்டலாம் 

பெருமாளையும் திருமாலையும் மறந்து              மணி வண்ணனைத் தேடியும் ஓடலாம் 
கருநீலக் கண்ணனையும் மறந்து விஷ்ணுவைத் தேடிப் பாடியும் ஓடலாம்

அங்கிருந்து இங்கு வந்தாலும் இந்தக் கடவுளையும் காண முடியாது 
இங்கிருந்து எங்கு ஓடினாலும் எந்தக் கடவுளையும் காண முடியாது 

உண்மையுடன் உழைத்து ஒருவருக்கும்  தீங்கு செய்யாதது நல்ல உள்ளம் 
நல்ல உள்ளத்தில் கடவுள் இருப்பதால் எங்கிருந்தாலும் அந்த உள்ளம் துள்ளும்!

- தஞ்சை த.இராமநாதன்  

No comments:

Post a Comment