வாசு சித்தப்பா - நினைவலைகள்
வாசு சித்தப்பாவென நானழைப்பேன்
வாடா அய்யாவென அவரழைப்பார்
புதிதாய் சைக்கிளை வைத்திருப்பார்
சுத்தமான ஆடையை அணிந்திருப்பார்
ஆலத்தூர்வரை சைக்கிளில் பேசிக் கொண்டே சென்றதுண்டு
ஆலமரத்தடியில் பலதடவை பேசிக் கொண்டே சிரித்ததுண்டு
நாகரிகத்துடன் நகைச்சுவையாகப் பேசுவார்
நயவஞ்சகமின்றி மனம் திறந்துச் சிரிப்பார்
அனைவரும் படிக்க வேண்டும் என்பார்
அயல்நாடு செல்ல வேண்டும் என்பார்
வரும் பொங்கலுக்குப் போகும்போது சென்றுப் பார்க்கலாம் என்றிருந்தேன்
செல்லும்போது அவர் இருக்க மாட்டார் என்றச் செய்தியை இன்றறிந்தேன்
இறந்தார் என்றறிந்தவுடன்.....
மனதிலோடும் நினைவலையின்
துளிச் சிதறல் கண்ணில் தெரிகிறது!
- தஞ்சை த.இராமநாதன்

RIP
ReplyDelete🙏🙏
Deleteதாதா அருமையான மனிதர் 😭ஆழ்ந்த இரங்கல்
ReplyDelete🤝🤝
Deleteஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன்
ReplyDelete🙏🙏
DeleteFine
ReplyDelete🙏🙏
Delete