ஆளுமைப் பெற்றோரின் மண்
பெரிய கோயிலின் கட்டிடக் கலையால்
பெயரைப் பதித்த பேரரசனின் தஞ்சை
மலையே இல்லாத ஊரிலே கட்டிக் காட்டி
மலைக்க வைத்த புனித மண் தஞ்சை
இப்படி எப்படிக் கட்ட முடிந்ததென
அசர வைத்த அரசனின் தஞ்சை
அகில உலகையும் அன்னாந்துப் பார்க்க
வைத்து உயர்ந்த மண் தஞ்சை
அரசியலில் கேட்டை விரட்டி கோட்டைக் கட்டி ஆளப்போகும் மண் தஞ்சை
மஹாராஜர் மாமன்னர் இராஜராஜர்
புகழைப் பரப்பப் போகும் மண் தஞ்சை!
- தஞ்சை த.இராமநாதன்

👍
ReplyDelete🙏🙏
ReplyDelete