Thursday, 3 November 2022

ஆளுமைப் பெற்றோரின் மண்

 


ஆளுமைப் பெற்றோரின் மண்

பெரிய கோயிலின் கட்டிடக் கலையால்
பெயரைப் பதித்த பேரரசனின் தஞ்சை

மலையே இல்லாத ஊரிலே கட்டிக் காட்டி
மலைக்க வைத்த புனித மண் தஞ்சை

இப்படி எப்படிக் கட்ட முடிந்ததென
அசர வைத்த அரசனின் தஞ்சை
 
அகில உலகையும் அன்னாந்துப் பார்க்க
வைத்து உயர்ந்த மண் தஞ்சை

அரசியலில் கேட்டை விரட்டி கோட்டைக் கட்டி ஆளப்போகும் மண் தஞ்சை

மஹாராஜர் மாமன்னர் இராஜராஜர்
புகழைப் பரப்பப் போகும் மண் தஞ்சை!

- தஞ்சை த.இராமநாதன்


2 comments: