முடி
குறுக்கு வாட்டில் வெட்டினாலும் அழுதுத் துடிப்பதுமில்லை
நெடுக்கு வாட்டில் சீவினாலும் துள்ளிக் குதிப்பதுமில்லை
சுத்தமாக மொட்டை அடித்தாலும் அதோடு முடிந்து விடுவதுமில்லை
மொத்தமாக நெட்ட வளர்த்தாலும் அதோடு ஒடிந்து விடுவதுமில்லை
முடி முடிந்தவரை முளைத்து வளராமல் அடியோடு மடிந்து விடுவதுமில்லை
முடி முடிந்தவரை முனிவராக்காமல் அடியாரை மடிய விடுவதுமில்லை
மீசையாக இருந்தாலும் முடியை முறுக்காமல் விடுவாருமில்லை
ஆசையாக இருந்தாலும் தாடியை நறுக்காமல் விடுவாருமில்லை!
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment