விளைந்து அரிசியாக வந்த நெல்
சொந்த நிலத்தில் விளைந்து விரைந்து அரிசியாக வெகுதூரம் செல்லும் நெல்லே
உமியை விலக்கியப்பின் எல்லா ரக நெல்லும் திறப்பது அரிசிப் பல்லே
சொந்த சேற்று நிலத்தில் விளைந்தாலும் வீட்டிலேயே அரிசியாகி சோறாகாத நெல்லே
கடையிலிருந்து தான் விளைந்த வீட்டிற்கே அரிசியாக வரும்போது கலந்திருக்கும் கல்லே
உன்னைக் கடையில் வாங்கித் தின்ன கூட்டம் கூடுவதை அறிவாயா நெல்லே?
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment