அம்பும் அன்பும்
முதுகில் குத்திய அம்புக் காயங்கள் தந்ததோ மறக்க முடியாத சோகங்கள்
மார்பில் தூக்கிய அன்புச் செல்வங்கள் தந்ததோ மறக்க முடியாத சுகங்கள்
முதுகில் தாக்கிய அம்பின் சோகங்கள் இறக்கும் முன்பே மறந்துப் போகும்
மார்பில் தேக்கிய அன்பின் சுகங்கள் இறந்தால் மட்டும் இறந்துப் போகும்
அம்பைக் கொண்டு வீண் வம்பை செய்வோரிடம் ஒதுங்கிப் போகனும்
பண்பைக் கொண்டு தன் அன்பைக் கொடுப்போரிடம் ஒத்துப் போகனும்!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment