அவரிடம் அரசியலார் கற்றப் பாடம்
எளிமையுடன் வாழ்ந்ததால்
வறுமையுடன் வாழ்ந்தார்
கபடமின்றி வாழ்ந்ததால்
கவலையுடன் வாழ்ந்தார்
தமிழனுக்காக வாழ்ந்ததால்
தமிழனாலேயே வீழ்ந்தார்
பாடசாலை அமைத்ததால்
பாடம் பயின்று இறந்தார்
ஆகவே - இக்கால அரசியல்வாதி,
அவரைப்போல் வாழத் துணியாது
ஆதாயத்தைப் பார்க்கத் துணிந்தார்!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment